காட்சிகளை கண்ணுற்றால்
சாட்சிகள் பின்னமுறுமென
கன்னங்கரிய விழிதன்னை
சின்னதொரு கருந்துணியால்
முன்னம் நீ மூடி விட்டாய் ..
மின்னலென கண்ணைப்
பறிக்கும் வெள்ளிக்காசுகளோ
தெறிக்க செய்ததுவே
நீதி தேவதை உன் துலாக்கோலை
பாதி கண் விழித்து ..நீ
சதி செய்யவும் - சட்டத்தின்
விதி தொய்யவும் ..நாட்டின்
கதி மாறவும் ..மாயங்கள் பலவாக
மதி மறைய .. நியாயங்கள்
மடுவினிலே மரணிக்கும்
நடுவினிலே பாமரனோ - காலக்
கெடுவின்றி கிடப்பினிலே
No comments:
Post a Comment