Saturday, May 27, 2017

செங்காந்தள் கையேந்தி... குறுந்தொகை #1

குறுந்தொகை #1

செங்காந்தள் கையேந்தி   
செங்காந்தள் காணுகையில்
செங்காந்தள் வாடிடுமே
ஏந்திழையின் எழிற்கண்டு  - மலை
வேந்தன் கண்மூடா கனவினிலே
மனம் கடுக


பாங்கி கண்டு
ஏங்கி நின்றான்.
தாங்கிய மலர்  - நல்
நங்கையிடம் சேர்க்க
முன் கை நீள ..
சொன்னவள் சொல் கேளீரோ:

செங்களத்து மாந்தர் நாமே
செங்கோல் அம்புடைத்து
செங்கோட்டுக் களிறு கொண்டோம்
செங்கழலோன் குமரனவன்
செங்குன்றம் யாம் கொண்டோம்

செங்காந்தள் குன்று  கொண்டோம்
செங்காந்தள் நன்று தந்தாய்

செங்களம் படக்கொன்ற” என்ற  #1 குறுந்தொகைப் பாடலை அடிப்டையாகக் கொண்டு எழுதப்பட்டது.

எழுதியவர்: திப்புத் தோளார்

தலைவன் மீது தலைவி கோபமாக இருக்கிறாள்- தலைவனை சந்திக்க தான் வராமல் தன் தோழியை தூது அனுப்புகிறாள்.தலைவிக்காக அவன் கொண்டுவந்த செங்காந்தள் பூக்களைத் தலைவியிடம் கொடுக்குமாறு தலைவன் வேண்டுகிறான். , ”எங்கள் நாட்டில் உள்ள குன்றுகளில் இது போன்ற பூக்கள் கொத்துகொத்தாக உள்ளன.” என்று கூறி, தலைவியின் கோபம்  வெளிப்படுமாறு அவன் கொடுக்கும் பூக்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறாள் தோழி.



#1 செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

#Rajikavithaigal

நன்றி:முனைவர். பிரபாகரன்

nallakurunthogai.blogspot.com  

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...