Saturday, May 27, 2017

பூ எனக் கொள்வேன் எருக்கை... குறுந்தொகை #17

kurunthogai#17

ஒற்றை எழுத்து  கொல்லுதடி

#Rajikavithaigal

பூ    எனக் கொள்வேன் எருக்கை
மா  எனக் கொள்வேன் பனையை
சீ     என ஊரும் தூற்ற
ஆ   என அயர்வேனோ?
நீ     என வாழும் என்னுயிர்
போ எனத் துரத்தலாகுமோ ?

கூ     எனக் கூவும் குயிலே..!
மை எனப் பொய் தடவி - இதயப்
பை தனை தாக்கினாயே  
தை அதை தையலே  அன்பால்  
கை  சேர்ப்போம் - என்
ஐ மிளிர் அஞ்சுகமே
கோ  என வாழ்ந்தேனே
தீ   எனச்  சுட்டாயே …
வை உன் மனதை
வா வான் போல் வாழ்வோம்


படம் (நன்றி) : wikipedia.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com

குறுந்தொகை#17

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.


பாடியவர்:  பேரெயின் முறுவலார்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...