Saturday, May 27, 2017

எங்கே என் மகள்? என... குறுந்தொகை #15

Kurunthogai #15

#Rajikavithaigal

எங்கே என் மகள்? என
எங்கும் தேடி - நொடி
தங்காது ஓடும் தாய் - நம்
நங்கையை கண்டாயோ?
பங்கத்திற்கு பயந்து
தங்கையென கருதி தம்
சுற்றத்து தோழியை வினவ

பெற்ற தாயை தேற்ற
உற்ற தோழி உடன் வந்தாள்

பறை ஒலிக்க
நிறை சங்கு நின்றொலிக்க
இறையாண்மை கொண்ட
நிறைமொழி மாந்தர்
கோசர் போல்
நேச மனமிரண்டும்
வாசமலர் சூடி
பாசமாய் பந்தம் புகுந்ததுவே

வளைநிறை கரம் கோர்த்து
சிலையழகு சின்னவள்
கழலணிந்த காளையவன் பின்னே
பழையதோர் ஆலமரத்தருகே
சேயிலை செருகிய -வெண்
வேலுடை வீரனாம்
பாலைத் தலைவனுடன்
ஆலைப் போல் தழைக்க சென்றாளே

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப” எனத் தொடங்கும் #15.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

பாடியவர்: ஔவையார்.


இரு இளம் உள்ளங்களின் காதலை பெற்றவர்கள் ஏற்கவில்லை. எனவே வேறு ஊருக்கு சென்று திருமணம் என்னும் பந்தத்தில் இணைதலை “அறத்தொடு நிற்றல் “ என்கிறது தொல்காப்பியம். அதற்கு தோழியும் அவள் தாயும் உதவுகின்றனர். மகளை காணும் தாய் பதறும் போது உன் மகள் நல்ல முறையில் திருமண பந்தத்தில் இணைந்து விட்டாள் என்று கூறுவதாக அமைந்த பாடல். கோசர்கள் எனப்படும் அறநெறி தவறாத சான்றோர்கள் போல இவர்களின் அன்பும் உண்மையானது என்று தொனிக்கிறது பாடல்.




படம் (நன்றி) : wikipedia.com
tamilengalmoossu.blogspot.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com

குறுந்தொகை#15
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...