கடைமடை காட்டினிலே
இடைவிடா முப்போகமுண்டாம்
மாடு கட்டி போரடித்தால் மாளாதென்று
யானை கட்டி போரடித்து சோறுடைத்த
சோழ நாட்டினிலே வீரமிகு
வேழமென விண்ணுயர்ந்த வேளாண்
கூட்டமதை வெறும் புழுதியாக்கி
நாட்டின் கடைக்கோடியாக்கியதும்
கதி கெட்டு ..உழவனின்று
விதி வென்று மதி நொந்ததுவோ?
இடைவிடா முப்போகமுண்டாம்
மாடு கட்டி போரடித்தால் மாளாதென்று
யானை கட்டி போரடித்து சோறுடைத்த
சோழ நாட்டினிலே வீரமிகு
வேழமென விண்ணுயர்ந்த வேளாண்
கூட்டமதை வெறும் புழுதியாக்கி
நாட்டின் கடைக்கோடியாக்கியதும்
கதி கெட்டு ..உழவனின்று
விதி வென்று மதி நொந்ததுவோ?
ஏரிகள் பெருக்கி நீரினை உயர்த்தி
சேரிகளும் செழிக்க செய்த வள்ளல்
ஓரிகளும் பாரிகளும் தோற்றதுண்டோ ?
வாரியனைத்தையும் சுருட்டும் உலக
வாணிப கலாச்சாரத்திற்கு ரத்த
காணிக்கையானதோ
மாணிக்கமாம் இயற்கை வேளாண்மை
சேரிகளும் செழிக்க செய்த வள்ளல்
ஓரிகளும் பாரிகளும் தோற்றதுண்டோ ?
வாரியனைத்தையும் சுருட்டும் உலக
வாணிப கலாச்சாரத்திற்கு ரத்த
காணிக்கையானதோ
மாணிக்கமாம் இயற்கை வேளாண்மை
களை நீக்கியால் கசடாக்கினர்
தழை சத்தென தன்மை மாற்றினர்
மணிச்சத்தென மண் மாய்த்தனர்
பூச்சிக்கொல்லியாய் வேடம் பூண்டு - மண்
மூச்சை நிறுத்தியதென்ன மாயம்
வேதிப்பொருட்கள் வித விதமாய்
மீதி மண்ணையும் மலடாக்க
நிர்வாண நிலங்களின்று நிதர்சனமாய்
சர்வாங்கமும் அடங்கி வேளாண்மை
தழை சத்தென தன்மை மாற்றினர்
மணிச்சத்தென மண் மாய்த்தனர்
பூச்சிக்கொல்லியாய் வேடம் பூண்டு - மண்
மூச்சை நிறுத்தியதென்ன மாயம்
வேதிப்பொருட்கள் வித விதமாய்
மீதி மண்ணையும் மலடாக்க
நிர்வாண நிலங்களின்று நிதர்சனமாய்
சர்வாங்கமும் அடங்கி வேளாண்மை
குறிப்பு :
கடைமடை காட்டினிலே
இடைவிடா முப்போகமுண்டாம் - காவிரி டெல்டா பகுதி என்பது கடைமடை பகுதியாகும். வளம் மிக்க அப்பகுதியில் முப்போகம் விளையும். (சம்பா, தாளடி,குருவை) அங்கு தான் மாடு கட்டி போரடித்தால் மாளாதென்று யானை கட்டி போரடித்ததாக பாடல் குறிப்பு கூறுகிறது.
கடைமடை காட்டினிலே
இடைவிடா முப்போகமுண்டாம் - காவிரி டெல்டா பகுதி என்பது கடைமடை பகுதியாகும். வளம் மிக்க அப்பகுதியில் முப்போகம் விளையும். (சம்பா, தாளடி,குருவை) அங்கு தான் மாடு கட்டி போரடித்தால் மாளாதென்று யானை கட்டி போரடித்ததாக பாடல் குறிப்பு கூறுகிறது.