ஓர் பாதி கண் மூடி ..
இரு இதயம்
முத்தமிழாய் முகிழ்ந்திருக்க ..
நால்வேதம் நலம் பெருக்க ..
ஐம்பூதம் ..சாட்சியாக…
அறுசுவையால் ..அகம் ..மணக்க..
ஏழடிகள் இணை நடந்து …
எட்டுத் திக்கும் கொட்டி முழக்க..
ஏழு சுரங்களாய் யாழினிக்க - நல்
அறுகுணங்கள் சீராய்க் கொண்டு
ஐம்பெரும்காப்பியமாய் அகிலம் போற்ற
நான்கு பேர் நல்லாசியிலே இருவர்
மூன்றாய் முத்தென முகிழ - கண்மணி
இருவர் கருத்தாய் வளர ..- நல்ல
ஓர் பல்கலைக்கழகமாய் திகழ்த்திடுமே.
இரு இதயம்
முத்தமிழாய் முகிழ்ந்திருக்க ..
நால்வேதம் நலம் பெருக்க ..
ஐம்பூதம் ..சாட்சியாக…
அறுசுவையால் ..அகம் ..மணக்க..
ஏழடிகள் இணை நடந்து …
எட்டுத் திக்கும் கொட்டி முழக்க..
ஏழு சுரங்களாய் யாழினிக்க - நல்
அறுகுணங்கள் சீராய்க் கொண்டு
ஐம்பெரும்காப்பியமாய் அகிலம் போற்ற
நான்கு பேர் நல்லாசியிலே இருவர்
மூன்றாய் முத்தென முகிழ - கண்மணி
இருவர் கருத்தாய் வளர ..- நல்ல
ஓர் பல்கலைக்கழகமாய் திகழ்த்திடுமே.
கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி