Monday, September 25, 2017

ஓர் பாதி கண் மூடி .. ....இரு இதயம்.....

ஓர் பாதி கண் மூடி ..
இரு இதயம்
முத்தமிழாய் முகிழ்ந்திருக்க ..
நால்வேதம் நலம் பெருக்க ..
ஐம்பூதம் ..சாட்சியாக…
அறுசுவையால் ..அகம் ..மணக்க..
ஏழடிகள் இணை நடந்து …
எட்டுத் திக்கும் கொட்டி முழக்க..
ஏழு சுரங்களாய் யாழினிக்க - நல்
அறுகுணங்கள் சீராய்க் கொண்டு
ஐம்பெரும்காப்பியமாய் அகிலம் போற்ற
நான்கு பேர் நல்லாசியிலே இருவர்
மூன்றாய் முத்தென முகிழ - கண்மணி
இருவர் கருத்தாய் வளர ..- நல்ல
ஓர் பல்கலைக்கழகமாய் திகழ்த்திடுமே.

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...