நவீன வகை (மீ மொழி) கவிதைகள்
கவி விளக்கம் :
நிற்காத நொடி முட்களே கற்காலம் முதல் தற்காலம் வரை நிதர்சனம் அந்நொடிப் பொழுதே இறை தரிசனமும் என்பதை உணர்ந்தால் கழுத்தருகே வந்த குறுவாள் கவின்மிகு கழுத்தணியாக ..இறை அளித்த வரமாகவும் மாறுமன்றோ ? நொடி முள்ளை நொடிக்காது சிக்கென பிடித்து சிரமேற்றிட்டால் ..சிந்தையெலாம் சிறக்குமன்றோ? கடந்த காலம் ..எதிர்காலம் ..வலைகளில் சிக்காது மீண்டு நிகழ்கணத்தில் நிறைபொருளாம் இறைவனை இச்சணத்தில் இங்கிப்போது கண்டு திளைக்கலாம் என்பது ஜென் தத்துவ செவ்வறிவு ..
நிற்காத நொடி முட்களே கற்காலம் முதல் தற்காலம் வரை நிதர்சனம் அந்நொடிப் பொழுதே இறை தரிசனமும் என்பதை உணர்ந்தால் கழுத்தருகே வந்த குறுவாள் கவின்மிகு கழுத்தணியாக ..இறை அளித்த வரமாகவும் மாறுமன்றோ ? நொடி முள்ளை நொடிக்காது சிக்கென பிடித்து சிரமேற்றிட்டால் ..சிந்தையெலாம் சிறக்குமன்றோ? கடந்த காலம் ..எதிர்காலம் ..வலைகளில் சிக்காது மீண்டு நிகழ்கணத்தில் நிறைபொருளாம் இறைவனை இச்சணத்தில் இங்கிப்போது கண்டு திளைக்கலாம் என்பது ஜென் தத்துவ செவ்வறிவு ..
படியளக்கும் பெம்மானும்
நொடி முள்ளை
கொடியெனவே கொண்டிடுமோ ?
நொடி முள்ளை
கொடியெனவே கொண்டிடுமோ ?
விடியலேங்கி புரண்டழுகும்
கடினமிகு நோயுற்றோர் உள்
ஒடிக்கும் நொடிகள் உயிரறுக்க
செடியாய வல்வினையின் கைப்பாவையென
கடினமிகு நோயுற்றோர் உள்
ஒடிக்கும் நொடிகள் உயிரறுக்க
செடியாய வல்வினையின் கைப்பாவையென
கடும் மின்னலென
கடுகியோடும் வீரனுக்கு
நொடியின் பின்னமதின்
பிடி தன்னில்
தடித்த தங்கக் கோப்பையுமே
கடுகியோடும் வீரனுக்கு
நொடியின் பின்னமதின்
பிடி தன்னில்
தடித்த தங்கக் கோப்பையுமே
படிப்புடனே பட்டறிவும் பெற்றிங்கு
விடுத்த வினாடிதனை விண்ணேற்றி
தொடுத்த நல்லிறை மாலையாக்கி
கெடுத்த மடியகற்றி மாண்புற்றோர்
எடுபிடியானதுண்டோ ?
விடுத்த வினாடிதனை விண்ணேற்றி
தொடுத்த நல்லிறை மாலையாக்கி
கெடுத்த மடியகற்றி மாண்புற்றோர்
எடுபிடியானதுண்டோ ?
நெடு வெள்ளமதிலூறும்
நடு வள்ளமதில் ஊசி முனை
விடு துவாரமது ..வீழ்த்திடுமே
படு குழியினிலே ..காலமது
நடுவனவன் நமக்களித்த வள்ளமுமே
மடு மலையாம் காட்டாற்று ஓட்டமதில்
நடு வள்ளமதில் ஊசி முனை
விடு துவாரமது ..வீழ்த்திடுமே
படு குழியினிலே ..காலமது
நடுவனவன் நமக்களித்த வள்ளமுமே
மடு மலையாம் காட்டாற்று ஓட்டமதில்
மாடு மனை மகிழ்வுற்று
வீடுபேறு விளங்கிடவே
நொடி முட்கள் சிரமேற்ற
தடித்த மனம் தயவுறுமே
வெடிக்கும் ‘வினை புதிது’ விலகிடுமே
பிடித்த ‘பழவினைகள்’ பதுங்கிடுமே
வீடுபேறு விளங்கிடவே
நொடி முட்கள் சிரமேற்ற
தடித்த மனம் தயவுறுமே
வெடிக்கும் ‘வினை புதிது’ விலகிடுமே
பிடித்த ‘பழவினைகள்’ பதுங்கிடுமே
குறிப்பு : கெடுத்த மடியகற்றி - கெடுத்த சோம்பல் அகற்றி
வள்ளம் - படகு /தோணி
நடுவனவன் - நடுநிலை தவறா இறைவன்
மடு மலையாம் காட்டாற்று ஓட்டமதில் - மேடு பள்ளங்கள் நிறைந்த மானிட வாழ்க்கை
நிகழ் கணத்தில் வாழத் தொடங்குங்கால் விழிப்புணர்வு மேம்படுத்தலால் புதிய வினைகள் ( ஆகாமியம்) அளவில் குறையும் ..’பழவினைகள்’ ஆன சஞ்சிதம் வலிமை குன்றும்
வள்ளம் - படகு /தோணி
நடுவனவன் - நடுநிலை தவறா இறைவன்
மடு மலையாம் காட்டாற்று ஓட்டமதில் - மேடு பள்ளங்கள் நிறைந்த மானிட வாழ்க்கை
நிகழ் கணத்தில் வாழத் தொடங்குங்கால் விழிப்புணர்வு மேம்படுத்தலால் புதிய வினைகள் ( ஆகாமியம்) அளவில் குறையும் ..’பழவினைகள்’ ஆன சஞ்சிதம் வலிமை குன்றும்