Friday, April 28, 2017

பருவ மழை காற்று

பருவ மழை காற்று தமிழத்திற்கு மழையையும், மண்ணை விட்டு பிரிந்தவர்களுக்கு பழைய நினைவுகளையும் அள்ளி தெளிக்கிறது
மழை நீர் கப்பல்கள் 
**************************************
இளஞ்சிவப்பாய் களிமண் கலந்து
மழைவெள்ளம்
கண்ணாமூச்சி காட்டும்
எதிர்பக்க வாய்க்காலில்
விரைவாய் ஓட
வினாடி நேரம் வியந்து
பக்கம் போய் பார்க்க குடும்ப
பாராளுமன்றத்தில் அனுமதி உண்டு
பக்கத்துணையாய் அண்ணன்கள்
பாதுகாப்பிற்கு பத்திரமாய் கூட்டிச் செல்ல
மறக்காத மனக்காட்சி
மழையுண்டு ..மண்ணோடு ஓடும்
மழை நீருண்டு ..வாய்க்கால் உண்டு

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...