
வெண்ணையாய் விழுங்குவது
உன்னைத்தானே இவ்
உண்மை நீ அறிவாயோ?
உன்னைத்தானே இவ்
உண்மை நீ அறிவாயோ?
விண்ணை முட்டும்
விசுவரூபம் எடுப்பேன்
கண்ணே நான் உன்னை
கவர்ந்திழுக்கும் மாயமது.
விசுவரூபம் எடுப்பேன்
கண்ணே நான் உன்னை
கவர்ந்திழுக்கும் மாயமது.
கண்ணை காதை மூக்கை கழற்றி வை
விண்ணைத்தாண்டும் ஆசை விதைக்கும் மற்ற
புலனிரண்டை கொஞ்சம் மாற்றி வை.
விண்ணைத்தாண்டும் ஆசை விதைக்கும் மற்ற
புலனிரண்டை கொஞ்சம் மாற்றி வை.
மாயங்கள் மாற்றிவிடு - புலன்செய்
மாயங்கள் மாற்றிவிடு.
காயங்கள் ஆறிவிடும் - மனக்
காயங்கள் ஆறிவிடும்.
மாயங்கள் மாற்றிவிடு.
காயங்கள் ஆறிவிடும் - மனக்
காயங்கள் ஆறிவிடும்.
இரும்பு பூட்டைந்தை..போட்டுவிடு.
கரும்பு காட்டினிடை களிறும் நீயன்றோ?
பேரானந்த
கரும்பு காட்டினிடை களிறும் நீயன்றோ?
கரும்பு காட்டினிடை களிறும் நீயன்றோ?
பேரானந்த
கரும்பு காட்டினிடை களிறும் நீயன்றோ?
புலனைந்தை மாற்றி விட்டேன்
பலனும்தான் பார்த்துவிட்டேன்.
பலனும்தான் பார்த்துவிட்டேன்.
புண்ணாகிப்போன புலனை நான்
மண்ணோடு மாய்த்துவிட்டேன் .
மண் உண்ணா மாண்பானேன்.
மண்ணுண்ட மாயனானேன்.
மண்ணோடு மாய்த்துவிட்டேன் .
மண் உண்ணா மாண்பானேன்.
மண்ணுண்ட மாயனானேன்.
மாசகற்றி..தூசகற்றி...
நீர் நீக்கி .மோர்..நீக்கி
வெண்ணையாய் திரண்டிங்கு வந்துவிடு
வெகு காலம் பசியுண்டு இங்கெனக்கு.
நீர் நீக்கி .மோர்..நீக்கி
வெண்ணையாய் திரண்டிங்கு வந்துவிடு
வெகு காலம் பசியுண்டு இங்கெனக்கு.
வெண்ணையாய் விழுங்குவது
உன்னைத்தானே இவ்
உண்மை நீ அறிவாயோ?
உன்னைத்தானே இவ்
உண்மை நீ அறிவாயோ?
No comments:
Post a Comment