Friday, April 28, 2017

 உண்மை நட்பு
உயிர்நட்பு உயர்நட்பு ஓராயிரம் - இவ்
உலகில் உண்டு பாடிடுவோம் பாவாயிரம்.
கண்ணனுண்டு கர்ணனுண்டு அவ்வையுண்டு அதியனுண்டு.
கற்பெனவே காத்திட்ட கதைகள் நமக்குண்டு.
ஆணும் பெண்ணும் அந்நிய அண்டவாசி
அப்படியோர் நிலையினிலே அவ்வையும் அதியனும்
அருந்தமிழால் அன்பாகி கண்ணியம் கூட்டி
நட்பென்னும் நாட்டினை ஏட்டினில் ஏற்றினர்.
நாட்டமிகு நல்நட்புக்கள் நாலு கோடியிங்கு
தேட்டமாய் இருந்தாலும் நாலு பேருக்கு
நடுங்கி ஆழக்குழி தோண்டி புதைக்கும்
நடப்பும் இங்குண்டு..அகண்ட பார்வை
நாட்புறம் சுற்றி விசாலமாக்கச் சொன்ன
பாவேந்தர் பாடலை நட்புநாட்டுப் பண்ணாய்
பாவித்து தேடலை நாம் கொள்வோம் - அப்
பாவி இளையர்கள் அரிவாளை வெறுப்போம்.
உள்ளம் விரித்து உண்மை பரப்பி
கள்ளம் தவிர்த்து பெண்மைப் போற்றினால்
கண்ணிய நட்பு களங்கப்படாது - ஆண்
பெண்ணிய நட்பில் கலக்கம் வராது.
சின்னதாய் சிறுத்த நம்முலகம் - பல
வண்ணமாய் உதித்த வலையுலகால் - இனிய
முகநூல் கொண்டு முப்பதாண்டு முன்
அகத்தில் பூட்டிய நட்பை மீட்டோம்.
அகவை மறந்தோம் ஆர்ப்பரித்தோம் - அன்பு
ஆழிக்கடலில் முத்தெடுக்கப் போய் மூச்சடைத்து
மூழ்கி நின்றோம் முத்தல்ல முத்துமாலையன்றோ
சொத்தாகக் கிடைக்கப் பெற்றோம்..சொல்லுண்டோ
பித்தாகி நிற்கின்றோம் முத்தான முதல்வணக்கம்
சத்தான முகநூலுக்கும் குறுஞ்செயலி சேவைக்கும்.
மத்தாப்பு தோரணங்கள் கித்தாப்பு சரவெடிகள்
மொத்தமது எம் நன்றி நவிலலன்றோ ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...