Friday, April 28, 2017

ஓய்வாக அம்மா.... ஓயாத பேச்சு

தரை தவழும் தங்க அரளி
தோட்டத்து மூலையிலே
கண்ணைப் பறிக்கும்
வண்ணம் வாரியணைக்கத் தூண்டும்
கண்ணாடி சன்னல் வழி
ஏக்கப் பார்வையோடு
பூக்களோடு சாடை பேசும்
கோலி குண்டு கண்கள் ..
நான்கு பருவமும் பார்க்கும்
பாக்கியசாலி ..
வெள்ளை மழை பொழியும்போது
புரண்டு விளையாட ஆசை
பனிப்பொழிவுக்கும் ..
பணிமனைக்கும் சம்மந்தமுண்டோ ?
வெள்ளை மழையில்
வெள்ளந்தியாய் ..
வேலை வெட்டியில்லா பனிமனிதன்
வார இறுதி குழந்தைகள் கொண்டாட்டம்
பனிமனிதன் வெளியே
சன்னலுக்கு உள்ளே
பனிமனிதனை பார்த்துக்கொண்டு நான் ..
வண்டி நிறுத்தும் ஓசையில் புறப்படும்
ஓட்டப்பந்தயம் எனக்கும் மணிக்கும்
ஒவ்வொரு நாளும் வெல்பவன் அவனே
முன்னங்கால்களை முதலில் அம்மாவின் மேல்
சாய்வு நாற்காலியில்
ஓய்வாக அம்மா
ஓயாத பேச்சு நானும் மணியும்
அத்தனையும் அழகு
உன் மடியில் நான்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...