Friday, April 28, 2017

Image may contain: outdoor#Rajikavithaigal
அங்கொன்னு இளிக்கிது..ஆந்தைப் போல் முழிக்கிது ..
அலிபாபாவின் ஆரணங்கு பாடல் காட்சி சுழன்றோட..
அடுத்த வீட்டு கூரையில் அசையாத் தவத்தில்
ஆந்தை ..அது அசைவை நோக்கி நாங்கள் 
பேந்த பேந்த முழிக்கிதா? பேசாம இருக்குதா?
மாந்தர் மனம் மாயாத அசைவு ஆவல்.
இரவு நேர வேலைக்கு ஓய்வு நிலையில் இருக்குதா?
கரவு முதல் களை அகற்றி துறவு நிலையில் திளைக்குதா?
அப்படியோர் தவக்கோலம்
அசையாத ஓர் ஆந்தை சுத்தவெளிச் சின்னமா? - மாந்தர்
அசைபோடும் எண்ணம் திசைதோறும் ஓட்டம்.
புகைபோக்கி புத்தனே! - இன்று
மிகையான பொழுதுபோக்கு
வகையான தேநீர்க் கோப்பையோடு.
ஆச்சரிய கணங்கள்..அடுக்கடுக்காய் ஆரம்பம்
பேச்சறியா பாலகன் மடுவிட்டு மலையேறும்
மாமலையாம் ஆண் களிறு அதனருகில் போவது போல்
ஆந்தை பக்கம் அமர ஓர் குட்டிக் குருவி
ஆகாசம் விட்டு இங்கு
ஆபத்தின் அடிமடியில் அறியாத அவதானம்.
பட படப்பு வெகுவாக ..காட்சிகள் மாற்றம்.
சிடுசிடுப்பு சின்னதாய் மனதில் சீற்றம்
சின்னக் குருவிக்கென்ன சித்தமயக்கம்
சின்னாபின்னமாக சிறகடித்து வருவதுமேன்?
சில நொடிகள் சித்திரமாய் நிச்சலனம்
சிறுபயலாய் சில்மிஷங்கள் சிந்தியது சிறுகுருவி.
சிறுபுயலாய் சிறகடித்து சீண்டியது
அசையாத ஆனந்த யோகி ஆந்தையாரை.
நிச்சலனம் ..நிமிர்ந்தது ..
பெருவிழி விரித்தது...
"குருவி குஸ்கா ரெடி"
குறுமனம் கூவியது.
குருவி..குட்டிக் குருவி ..எட்டி போ..
அஞ்சியது மனம் ..கெஞ்சியது அக்கணம்.
உருவு கண்டு எள்ளுவதே
கருமுதல் வந்த கலை மாந்தர்க்கு.
குதித்து குதித்து எம்பியது குருவி
கொத்த கொத்த தாவியது சிறு அலகால்.
ஆந்தை ஆரவாரத்திற்கு அசையவில்லை.
அக்குருவியோ ஆர்ப்பாட்டத்தை நிறுத்தவில்லை.
முப்பது நொடியில் முப்பரிமாணக் காட்சி
முழுநீளப்படமாக முகட்டின்மேல்
முழுவீச்சில் வாழ்வா? சாவா?
முப்பத்தியோராவது நொடி.
'தப்' 'தப்' தட்டியது தன் சிறகு
அரைமணி நேரம் அசையா ஆந்தை.
அடுத்து வரும் 'கபளீகர' காட்சியை
கடுத்து நோக்க கடு மனம் இல்லை.
நடப்பதென்ன நாடகமா ?
அடுத்த ஐந்து நொடி அடுக்கடுக்காய்
அதிரடித் தாக்குதல் தந்தது ..ஆந்தை அல்ல..குருவி.
தத்தி தத்தி நோக்குதல் - சிறுமூக்கால்
கொத்தி கொத்தி தாக்குதல். .
ஆறாம் நொடி ..இயற்கையின் அதிசய விதி
படபடத்த..சிறகாய்..
இடம் விட்டு பெயர்ந்த ஆந்தை..
விடாமல் கீச்சிட்டு தொடர்ந்த குருவி.
தாய்க்குருவி ஒன்று தன்
சேய் காக்க பேய்க்குருவியானதோ?
தந்தைக்குருவி தான் தன்
விந்தைமிகு வீரம் காட்டி
நைந்த தன் குட்டி காத்ததோ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...