கார்மேகக் கண்ணிரண்டே !
கடவுள் வரைந்த கருப்பு வெள்ளை காவியமே !
கட்டுண்டேன் என்னருமை ஓவியமே !
கடவுள் வரைந்த கருப்பு வெள்ளை காவியமே !
கட்டுண்டேன் என்னருமை ஓவியமே !
காரோட்டி நான் செல்லும் வேளையிலே
கருந்துளியாய் காகமொன்று
துணுக்கு மேகமாய் மேல் வானில் மிதந்து செல்ல
துணைக்கு வெண்நாரைக் கூட்டமொன்று
இணையாக இசைந்து வர - உன்
கண்ணின் வெண்படலம் அதனுள்ளே
மின்மினியாம் கண்மணியே காட்சிக் கண்டேன்.
கருந்துளியாய் காகமொன்று
துணுக்கு மேகமாய் மேல் வானில் மிதந்து செல்ல
துணைக்கு வெண்நாரைக் கூட்டமொன்று
இணையாக இசைந்து வர - உன்
கண்ணின் வெண்படலம் அதனுள்ளே
மின்மினியாம் கண்மணியே காட்சிக் கண்டேன்.
வானத்து தேவதையோ? வனத்திற்கோர் தேவதையோ?
ஊனற்று உயிரற்று உழன்ற என் சீவனுக்கோர்
வான்மழையும் உன் விழியே !
நான் நனையாக் கருங்குடையும் உன் இமையே !
மென்மேலும் நான் விரிய நன்கொடையானாய்.
கண்ணளவு தெரியாது கால் தடுக்கி விழுந்துவிட்டேன்
காதல் என்னும் அமுதூற்றி
விண்ணளவு விரித்துவிட்டாய்...என் உயிரை.
வீணாகப் போயிருப்பேன்..வீணை ஆக்கிவிட்டாய்
காணாமல் போயிருப்பேன் ..கானம் ஆக்கிவிட்டாய்.
ஊனற்று உயிரற்று உழன்ற என் சீவனுக்கோர்
வான்மழையும் உன் விழியே !
நான் நனையாக் கருங்குடையும் உன் இமையே !
மென்மேலும் நான் விரிய நன்கொடையானாய்.
கண்ணளவு தெரியாது கால் தடுக்கி விழுந்துவிட்டேன்
காதல் என்னும் அமுதூற்றி
விண்ணளவு விரித்துவிட்டாய்...என் உயிரை.
வீணாகப் போயிருப்பேன்..வீணை ஆக்கிவிட்டாய்
காணாமல் போயிருப்பேன் ..கானம் ஆக்கிவிட்டாய்.
மண்ணாளும் மன்னவரும் - இசை
பண்ணாளும் பாரதியும் தன் காதல்
கனியமுதைக் ‘கண்ணம்மா’ என்றே தான்
களிப்புற்று கவின் மொழியில்
குயிலெனவே கூவினரோ?
செய்நன்றி கொல்லாத செம்மலன்றோ மேன்மக்கள்…
கண்மலரை காமனுமே அம்பாக்கி
கடி நெஞ்சை துளைத்ததனில்
காதல் பயிர் செய்துவிட்டான்..
காதலவன் கண்மணியை ..’கண் அம்மா’ என்றழைத்தே
கனிந்த நல் நன்றிதனை கமலக்கண்ணிற்கு கவிழ்த்திட்டான்.
பண்ணாளும் பாரதியும் தன் காதல்
கனியமுதைக் ‘கண்ணம்மா’ என்றே தான்
களிப்புற்று கவின் மொழியில்
குயிலெனவே கூவினரோ?
செய்நன்றி கொல்லாத செம்மலன்றோ மேன்மக்கள்…
கண்மலரை காமனுமே அம்பாக்கி
கடி நெஞ்சை துளைத்ததனில்
காதல் பயிர் செய்துவிட்டான்..
காதலவன் கண்மணியை ..’கண் அம்மா’ என்றழைத்தே
கனிந்த நல் நன்றிதனை கமலக்கண்ணிற்கு கவிழ்த்திட்டான்.
என் பிம்பம் உன் விழியில்
என் உயிரும் உன் வழியில்
கண் வழியே நுழைந்த நான்
கருத்துவரை சென்றதையும் உன்
கன்னம் சிவப்பேற்றி - பிற
காளைக்கோர் இடமில்லை இந்நெஞ்சில்
என்றேதான் சொல்லாமல் சொல்லியதோ.
என் உயிரும் உன் வழியில்
கண் வழியே நுழைந்த நான்
கருத்துவரை சென்றதையும் உன்
கன்னம் சிவப்பேற்றி - பிற
காளைக்கோர் இடமில்லை இந்நெஞ்சில்
என்றேதான் சொல்லாமல் சொல்லியதோ.
No comments:
Post a Comment