தலைப்பு: தென்றல் ..தீண்டி…
நிறைவு: புன்னகைக்காதோ பூக்கள்
நிறைவு: புன்னகைக்காதோ பூக்கள்
தென்றல் ..தீண்டி…
மன்றம் வந்த மலர்க்கூட்டம்…
சென்ற இடம் சொல்வாயோ ?
மன்றம் வந்த மலர்க்கூட்டம்…
சென்ற இடம் சொல்வாயோ ?
அன்றாட வேலையிலும்…
நன்றாக உடை உடுத்தி..
செண்டாக மல்லிகையை
வண்டாடும் கூந்தலிலே ..
திண்டாக.. சூடிவிடும் - கற்
கண்டான கன்னியிடம் சென்றனையோ?
நன்றாக உடை உடுத்தி..
செண்டாக மல்லிகையை
வண்டாடும் கூந்தலிலே ..
திண்டாக.. சூடிவிடும் - கற்
கண்டான கன்னியிடம் சென்றனையோ?
திண்டாடும் கூட்டமிது
சென்றோடும் சள்ளை என
கன்றோடும் கன்னியோடும் - திரு
வென்றாக வேண்டுமென
குன்றேறிக் குடியிருக்கும் - மா
மன்றோனாம் முகம் காண
நின்றே தான் கால் கடுக்க
திண்டாடும் கூட்டமிது - நீயோ
திண்தோளன் தோளினையே
நின் வயமாக்கி கொண்டிடவே
தோமாலை சேவையேற்று
பாமாலை கேட்டிடவே
மாமாயன் மலரடியைச் சேர்ந்தனையோ?
சென்றோடும் சள்ளை என
கன்றோடும் கன்னியோடும் - திரு
வென்றாக வேண்டுமென
குன்றேறிக் குடியிருக்கும் - மா
மன்றோனாம் முகம் காண
நின்றே தான் கால் கடுக்க
திண்டாடும் கூட்டமிது - நீயோ
திண்தோளன் தோளினையே
நின் வயமாக்கி கொண்டிடவே
தோமாலை சேவையேற்று
பாமாலை கேட்டிடவே
மாமாயன் மலரடியைச் சேர்ந்தனையோ?
ஓர் நாளே வாழ்பயணம்
சீராக தென்றலெனும்
தேர் ஏறி திகழ்மணமாய்
பேர் பெற்றாய்...பூமகளே …- உடன்
நாருக்கும் மணம் தந்தாய்.
சீராக தென்றலெனும்
தேர் ஏறி திகழ்மணமாய்
பேர் பெற்றாய்...பூமகளே …- உடன்
நாருக்கும் மணம் தந்தாய்.
ஒற்றை நாள் பூ வாழ்வில்
எத்தனை தான் மாற்றமிங்கே
புன்னகைக்காதோ பூக்கள்.
எத்தனை தான் மாற்றமிங்கே
புன்னகைக்காதோ பூக்கள்.
No comments:
Post a Comment