Friday, April 28, 2017

தூக்கணாங்குருவி

வித்தக வீடு கட்டும் 
வித்தையை தம் 
நத்தை வடிவ
தூக்கணாங்குருவி கூட்டாலே 
திக்கெட்டும் பரப்பியதே 
கைக்கெட்டா தொலைவினிலே 
கலைநயம் பாவியதே 
உயர் கோபுர 
அடுக்கு மாடி 
குடியிருப்புகட்கும் 
முன்னோடி இந்த 
தூக்கணாங்குருவி தானோ ? 
 பனையுயரம் பறந்தோடி 
வினையாற்றி விரைந்தோடி 
 தினையளவு திகைக்காது 
மனையாக்கும் மாண்பென்னே ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...