Friday, April 28, 2017

ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து
அகரத்தை….
அரிசி நெல்லில் 
அரி ஓம் என்றெழுதி
சிரசிலேற்றி
சிகரம் நோக்கிய
சீரிய பயணத்தை
 வீரியமாய்
விதைத்து ….கல்வி
கடமையையே தம்
உடமையாய் - எம்
மடமை மாற்ற
மண்ணில் உதித்த
மாண்புமிகு ஆசான்களை,
 உற்ற மண்
நெற்றியில் பட பாதம்
பற்றித் தொழுகின்றோம் - கண்களில்
ஒற்றி எழுகின்றோம்.
ஆதி ஆசான்
அம்மை அப்பரை
இம்மை மறுமைக்கும்
எம்மை விட்டு நீங்கா
நினைவுகளுடன் ..
நீள் கரம் கூப்பி ..
நித்தம் வணங்குகிறோம்.
கல்லூரிக் கடலின்
கலங்கரை விளக்க
கண்ணிய ஆசான்களுக்கும்
கரை தெரியா ..
நுரை அடங்கா …
நித்திய உலகியலில்
அத்தியாயங்கள் பல விரித்து
அனுபவப் பாடங்களை
அள்ளித் தந்த
அனைத்து
ஆசான்களுக்கும்
அன்புநிறை
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...