Friday, April 28, 2017

வானம் ..கண்டேன்...காணவில்லை

வானம் ..கண்டேன் …
காணவில்லை வெண்ணிலவை ..
கனிமுகமாக்கிக் கொண்டனையோ?
வானம் ...கண்டேன் …
ஏனோ இல்லை...விண்மீன் கூட்டம்
கண்ணொளியாய் கொண்டனையோ ?
வானம் கண்டேன் ….
சலித்தாலுமில்லை ..கருமுகில் ஓட்டம்
நெளிக்கூந்தல் கொண்டனையோ?
வானம் கண்டேன் …
சிதறும் சிறுவிண்கற்கள் சிக்கவில்லை ?
சித்தகத்திச் சிரிப்பாக்கிக் கொண்டனையோ ?
வானம் கண்டேன் …
வர்ணஜால வானவில்லெங்கே போனதுவோ?
சொர்ணவுடைக் கொண்டனையோ?
வானம் கண்டேன் …
காணவில்லை வெண்மேகமதை
மேனியாக்கிக் கொண்டனையோ?
வானம் கண்டேன் …
சுழலவில்லை ..வெண்புறாக்கூட்டம்
சூழலாக்கிக் கொண்டனையோ ?
வானம் கண்டேன் ..
சிறகடிக்கும் ..தேன்சிட்டுக்கள் சிலதுமில்லை
குரலாக்கிக் கொண்டனையோ?
வானம் கண்டேன் ..
ஏனில்லை பட்டாம்பூச்சியின்று ..
மனதாக்கிக் கொண்டனையோ ?
வானம் கண்டேன் ..
கானமிசைத் தேவதைகள்
வீணையென நீயிருக்க...
கானமென நான் உருக ..
மோன நிலையிருக்கக் கண்டேன்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...