என்ன புண்ணியம் செய்தேன் ..
கண்ணனென உள்ளங்கவர்
கள்வனே ..மகனாக
செல்லமவன் அகவை
நாலிரெண்டில் ..
நல்லதொரு ..
விழாவினிலே ..
நல்விருந்தாய்
திளைத்திருந்த .
வேளையிலே ..கண்கள் …
குளமாக ..-
உள்ளம் தேம்ப ...
வெள்ளை பட்டுடையில் ..
வெள்ளமென கண்ணீர்த் திட்டுகள்
அள்ளி அணைத்திட்டேன் அன்பனை
சொல்லடா ..என் செல்வமே..!
உள்ளத்தில் காயமென்ன?
பிள்ளைப் பேசியது விசும்பலிடை :
அள்ளி எரியும் ..
எச்சில் இலைக் கூட்டத்தில் ..
அச்சச்சோ கண்டேனே
பிச்சைக்காரர்கள்
முண்டியடித்த காட்சி ..
வண்டி வண்டியாய் உணவதனை
திண்டுக்கல் சமையல்காரர்
கொண்டு வந்து குவித்தாரே
கொடுப்பதற்கு குறையேதம்மா
தடுப்பவர்கள் யாரும் இங்குளரோயம்மா
திகைப்புற்றோம்
திண்ணையிலிருந்த
பண்ணையார் முதல்
பண்ணையாள் வரை ..
புண்ணியம் மிக செய்தேனய்யா
மண்ணுயிரை தன்னுயிராக காணும்
புண்ணியனை மகவாய் பெற
வரம்_வேண்டும்_கொடுப்பாயா..என
கரம் நீட்ட ஏதுமுண்டோ இறையிடம் ?
No comments:
Post a Comment