Friday, April 28, 2017

Version 1 - mandookam and manidan
தத்தக்கா பித்தக்கா தவக்களை
தாவிக் குதிச்சது நிலத்துல
மண்டைய பொளக்குற வெய்யிலுள
மண்டூகம் சுத்தி பாக்குது
குளுகுளு நிழலு ஒன்னு தெரிஞ்சது
பளபள ..பாம்போட படமது
பாவம் மண்டூகம் பாக்கலை
பாம்பு முகத்த நோக்கல
கப்புனு தாவி குந்துச்சு
இப்பனு சொருகுது கண்ணு
'பட்' டுனு போட்டுச்சு ஒன்னு
'சட்'டுனு வேலை டன்னு.
தத்தக்கா பித்தக்கா தவக்களைக்கும்
தத்துபித்து மனுசனுக்கும் ஒரு வார்த்தை
ஷார்ப்பாவே இருந்துக்க நீ
ஷோக்கா நீ ஆடாத.
ஆணவத்தை விட்டிரு நீ
அலெர்ட்டாவே இருந்துக்க நீ
அம்போ னு போகாத .
அத்தனைக்கும் காரணமே
அந்த 'ஈகோ' தான் சொல்லிப்புட்டேன்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...