Friday, April 28, 2017

மயிலிறகால்….நீ
மனம் தடவ….
மயிலிறகின் மயக்கு
நீலமும் பசுமையும்
வானாக புல்லாக விரிய..
தினம் ஒரு மென்
கனவு கண்டேன் ..
கண்டது கனவென்பதால்..
விண்டது போலும்…
சென்றது செல்லட்டும்..- மனம்
வென்றது நினைக்கட்டும் .
வலியாய்...வடுவாய்...
நின்றது வலிக்கும்..- மனம்
மென்றதை மறைக்கும் ..
மென்று ‘அதை’ மறைக்கும்
வடு நீக்க வரும் மருந்தாய்
மனம் விரும்புதே …
மயிலிறகு…
மனத்தில் பாலுண்டோ ?
ஆணென்ன பெண்ணென்ன ..?
மென் மனம் வன் மனம் இரண்டே தானன்றோ?
மென் மனம் …...நுண் மனம்
வன் மனம் …..திண் மனம்.
வன் மனம் வடு ஆக்கும்.
மென் மனம் வடுவாகும் - மன
மன்றம் தேடுது மயிலிறகு…
தென்றல் துணையோடு இதமாக…

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...