மயிலிறகால்….நீ
மனம் தடவ….
மனம் தடவ….
மயிலிறகின் மயக்கு
நீலமும் பசுமையும்
வானாக புல்லாக விரிய..
நீலமும் பசுமையும்
வானாக புல்லாக விரிய..
தினம் ஒரு மென்
கனவு கண்டேன் ..
கனவு கண்டேன் ..
கண்டது கனவென்பதால்..
விண்டது போலும்…
விண்டது போலும்…
சென்றது செல்லட்டும்..- மனம்
வென்றது நினைக்கட்டும் .
வென்றது நினைக்கட்டும் .
வலியாய்...வடுவாய்...
நின்றது வலிக்கும்..- மனம்
மென்றதை மறைக்கும் ..
மென்று ‘அதை’ மறைக்கும்
நின்றது வலிக்கும்..- மனம்
மென்றதை மறைக்கும் ..
மென்று ‘அதை’ மறைக்கும்
வடு நீக்க வரும் மருந்தாய்
மனம் விரும்புதே …
மயிலிறகு…
மனம் விரும்புதே …
மயிலிறகு…
மனத்தில் பாலுண்டோ ?
ஆணென்ன பெண்ணென்ன ..?
மென் மனம் வன் மனம் இரண்டே தானன்றோ?
ஆணென்ன பெண்ணென்ன ..?
மென் மனம் வன் மனம் இரண்டே தானன்றோ?
மென் மனம் …...நுண் மனம்
வன் மனம் …..திண் மனம்.
வன் மனம் …..திண் மனம்.
வன் மனம் வடு ஆக்கும்.
மென் மனம் வடுவாகும் - மன
மென் மனம் வடுவாகும் - மன
மன்றம் தேடுது மயிலிறகு…
தென்றல் துணையோடு இதமாக…
தென்றல் துணையோடு இதமாக…
No comments:
Post a Comment