Friday, April 28, 2017

என் மகள் எனக்கு தாயானாள்�
பெத்ததோ பலகோடி நட்டபட்டதோ சில லச்சம்
பழுதாகி போனதையே பாவிமனம் மறக்கலேயே
விழுதாகி வேர்விட்ட மரம் பொழச்சுடுமே!
செடியாகி வந்தமரம் வெறும் கொடியாகி
ஆணுமில்ல பெண்ணுமில்ல அர்த்தநாரியுமா ஆயிருச்சே
பாரதம்னு சொன்னாக வாழ்க்கையொரு போராச்சே
உடன்பொறந்தா கடனறுக்க ஓவியமா வந்தமக
தமிழ்நாடு பேராச்சு உலகமெல்லாம் புகழாச்சு.
அரவானைத்தான் வரித்து அன்புமகன் உருமாற
அர்ச்சனைகள் பலகோடி ஊர் வாயில்
அதை வடிக்க ஆயிரங்கவி போதா.
அண்ணன் தம்பி தங்கிடுவர் அக்கரையில்.
அல்லலுறும் பெற்றோரோ அக்கறையில் .
அன்றாடக் குடிகாரன் அவனுக்கோர் வீடுண்டு.
அல்லாடும் அரவானின் மனைவிக்கோர் நாதியில்லை.
அன்பில்லை வம்புண்டு பாவம் வாழத்தெம்பில்லை.
தாயுள்ளம் தவிக்கையிலே பாய்வெள்ளமாய்
வாய்ப்புக்களை காய்ப்புற்ற திருநங்கையர்க்கு - வாழ்வு
நலத்திட்டங்களாய் தந்திட்ட தமிழ் மகளே.
உலகநாடுகள் செய்யாதது செய்துநீ உயர்ந்திட்டாய்.
கல்லூரிக்கதவு திறந்தாய் ..கல்வியுதவி தந்தாய்.
வேலைவாய்ப்பு தந்தாய் நலவாரியம் அமைத்தாய்.
ரேவதி பெண்ஓட்டுநரானார் உரிமம் பெற்றார்.
ரோஜாவாக சின்னத்திரையில் மின்னச் செய்தாய்.
மனம் விட்டு பேச “சகோதரி “மனசு “ “சிருஷ்டி”
பெற்று 24மணிநேர இலவசசேவை தந்தாய்.
கற்பகா..கல்கி..ஸ்வப்னா..உச்சியிலேற்றினாய் .
ரேவதி சரிதம் கல்லூரி பாடமாக்கினாய்.
உணர்வு ஊனமான என்மக்கள் நிலை
உயர் ஞானமாக்கினையே என்சேயே தமிழகமே
நானுனக்கு தாயாக என்ன தவம்செய்தேனோ?
நீயென்னை சேயாக்கி தாலாட்டி விட்டனையே!

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...