தீக்குள் விரலை வைத்தால் ….
தீங்கு மிக நேருமென …
தீர்க்கதரிசி கவிக்கென்ன தெரியாதா?
தீக்குள் விரலை வைத்தால் -நின்னை
தீண்டுமின்பம் தோன்றுதென்றால்
தீட்டிய அறிவும் திகைக்காதோ …?
காக்கை சிறகினிலே ..
கருந்தன்மையவன் கண்ணன்
மரத்தினிலே …
பசுந்தன்மையவன் கண்ணன் ..
கீதங்களில் ….
நாதமெனும் தன்மையவன் கண்ணன்
நகரும் உருவமாம் புள்ளினத்திலும் ..
நகரா உருவமாம் புல்லினத்திலும் ..- கண்
கவரா அருவமாம் ஒளியிடத்தும்
தவறா உயிர்த்தன்மையது இறையாம்…
கண்டதெலாம் கண்ணனாகக்
கண்டதனால் தனை மறந்தனனோ ?
கண்ணனாகத் தான் மாறினனோ ?
தீக்குள் விரலை வைத்தனனே
தீண்டுமின்பம் தோன்றியதே ….
நந்தலாலாவுக்கு …
வெந்த தனலுமொன்றே ….
தண்ணிலவுமொன்றே …
செப்பிடுவீர் செகத்தீரே
இப்படித்தான் புனைந்தனனோ
செப்படிவித்தை கவி பாரதி
தப்படி தவறி வைத்திருந்தால் ..
எப்படி என்றே விளக்கிடுவீரே ..!
No comments:
Post a Comment