Friday, April 28, 2017

மனதோர மழைச் சாரல்

மழலை மிழற்று மொழி
மனதோர மழைச் சாரல் ..
மழைநேரம்
மயக்கும் மாலை ..
வியக்கும் விழியோடு சன்னலோரம்
விலையில்லா ..
பழையதோர் மனங்கவர் …
புதினம் ஓர் கையில்
புதுப்பாலில் தேநீர் .ஓர் கையில்
மனதோர மழைச்சாரல் ..
கண் சிரிக்கும்
உண்மை உணர்வு - உயிர்
தோழமையுடன் தோள் உரச
காலம் மறந்து கதைத்தல் ..
உணர்வெல்லாம் பெருவெள்ளம்
மனதோர மழைச்சாரல்
பல நாள் பயணத்திற்கு பின்
வெளி உணவு சலித்து ..
பழையது உண்டாலும்…
களையான முகம் ..
கலைப்பில்லா பரிவு
விலை மதிப்பில்லா விரல்
அளவு வீட்டு ஊறுகாய் ..
மனதோர மழைச்சாரல் ..
மழை போல மகிழ்வான ..
வாழ்துணை ..
மகிழ்வான நிகழ்வு பகிரும்
தோழமை ..தோள் சாய
வாழ் நாளெலாம் ..
மனதோர ..மழைச்சாரல் ..

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...