Friday, April 28, 2017

விழுந்தாலும்_விதையாகிடு

விழுந்தாலும்_விதையாகிடு
கட்செவிச் செய்தி 
உட்புகுந்ததுவே ...
நாட்டுநல
வேட்புக்கானதுவே ...
கற்பாறை மனத்தினையும்
கரைத்திடுமே ..
உரைத்ததொரு விதம்..
தேசம் காக்கச் சென்ற
நேசமிகுச் சிப்பாயின் குரலது ..
எல்லையோரம் விரையும் காலமது ..
தொல்லைகள் தோளோடு பவனி
இல்லை நானெனச் செய்தி வரலாம்..
பிள்ளையொன்றைப் பிறந்த நாட்டிற்கு
முல்லை மாலையாய் ஈந்த
தில்லையாடி வள்ளியம்மை நீயம்மா
கொள்ளை இன்பமும் நேரலாம்
சில்லிட்ட உடலும் ஊர்த் திரும்பலாம் ..
வீரன் நான் ஊர் வந்திட்டால்….
சேரன் மாதேவி சென்று - வீரப்
பேரனென ..மகிழ்ந்திடுவோம் .
வீரமரணம் விடயமாய் வந்திட்டால்
சோராதே ..அம்மா ..அச்சேதியால் .
வீரம் விதைத்தோம் ..நாட்டை
மாறாக் காதல் செய்த - வீர
வர்மனை வாரிசாய்ப் பெற்றோமென
கர்வம் மிகக் கொண்டுவிடு என்னுயிரே!
தரைத் தொட்டாலும் - என்னுயிர்
கறையில்லா விதையாகத் தானம்மா
வீழும் இவ்வுலகில் ..
குறிப்பு : கட்செவி - வாட்ஸப் என்ற குறுஞ்செயலிக்கு தமிழ் பதம்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...