Friday, April 28, 2017

ஆ கண்டேன்....

No automatic alt text available.

ஆ கண்டேன்
ஆலிலைக் காண்கிலேன்.
மா கண்டேன்
மயிலிறகு காண்கிலேன்.
கோ கண்டேன்
குழல் காண்கிலேன்.
ஆ வேண்டும் ஆலிலை வேண்டும்.
மா வேண்டும் மயிலிறகு வேண்டும்.
கோ வேண்டும் குழல் வேண்டும்.
பாதம் கண்டு
பரம் காணும்
பதம் எமக்கில்லை.
குழலூதி குழவியாக்கிவிடு.
மயிலிறகால் மனிதமாக்கிவிடு.
பொற்சதங்கைக்கோர்
நற்கூட்டாய் மயிலிறகு
ஆடக் காணவேண்டும் - குழல்
பாட கானம் வேண்டும்.
முழுமதியாய் நின்
முகம் காட்டிவிட்டு - எம்
அகம் தேக்கி விடு.

pic courtesy: Sumitra Ramjee

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...