Friday, April 28, 2017

தலைப்பு: பெண் அகராதியில் ஆண்…..
பண்பான ஆணென்றும் பெண்மனது வென்றிடுவான்.
பண்பான ஆண்மையிலே அன்பான உளமுண்டு.
அசையாத ஒழுக்குண்டு நல்திறனுண்டு - உளம்
பிசையாத இன்சொலல் உண்டு.
மெய்யன் என்றால் திளைத்திடுவாள்
பொய்யன் என்றால் பொங்கிடுவாள் - அன்பு
ஆணவனை அகத்தினிலே இருத்திடுவாள்.
ஆணவங்கள் காட்டிட்டால் அழுதிடுவாள் உளத்தினிலே.
வருங்கால வாழ்விடத்தில் பெரும்பங்கை ஆற்றிடவே
கரும்புள்ளம் கொண்டேதான் வந்திடுவர் பெண்மக்கள்
பெருங்காலம் ஆனாலும் அவளுக்கோர் மதிப்பில்லை
கடுங்காயம் கொடுத்திடுமே கள்ளமது துளிர்த்திடுமே.
கணவனவன் கன்னிமனம் அறிந்திடல் வேணும்
பெண்ணிவளைப் பெற்றவரும் உற்றவரும்
கண்ணனெவே மதித்திடல் வேணும் - பெண்ணவளே
ஆணினத்தை கேட்பதுவும் இதுவேஅன்றோ?
இதுவொன்று நடந்திட்டால் வேறொன்று உலகில்
பெரிதென்று எண்ணிட மாட்டாள் - தன்
உரிமைக் கணவனையே காலத்தின் நாயகனாய்
வரித்திடுவாள் பெண்பார்வை ஆண்பாலே இதுவன்றோ?
‘சகியாக தனைக் காணும் இணைதன்னை’
சுகமான வரமாக பெண்மை இனங்காணும்.
‘சுகதுக்கம் தனியில்லை நமக்கினி’ என்னும்
பகிர்கின்ற ஆணினமே பெண்ணவளின் பேராசை.
அற்பர்கள் அணுகாமல் அன்பவளைக் காத்திடவே
அடக்காதே சீறலுமாய் ..அச்சமகற்றிவிடு அன்புப்பீறலினால்.
ஆணுலக அச்சங்கள் உன்பதற்ற எச்சங்கள்
அவளறியா மிச்சங்கள் அவ்வறிவு ஊட்டிவிடு.
உன் மௌனம் உனக்குயிர்ப்பு
உன் மௌனம் அவள் தவிப்பு
மோனத்தின் பொருள் உணர்த்து - அவள்
வானத்தின் அருள் உதிர்ப்பாள்.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...