Friday, April 28, 2017

version 2 of maandukam and maanudam
கானகத்து மண்டூகம் ..
மடு வகன்று மலை புகுந்தது
கடுவெயிலில் சுடுபட்டு
பைய ஓர் பசுநிழல் தேடி
பைந்நாக படத்தடியே
கையகற்றி கால் விரித்து
மெய் மறந்து கண் சொருக
பைந்நாகம் பாய்ந்து விழுங்கி
பொய் மேக நிழல் சுருட்டி
பொய்கை நாடி புரண்டோட
கானகத்து மண்டூகம்
வானகத்தேகி மறைய
காரணமும் விதியா? சதியா?
இரண்டுமன்று..
மதி கூர்மை
விழிப்பு நிலை
வில்லாக அம்பாக
இவ்விரண்டும் இருந்திட்டால்
விடமான ஆணவ பைந்நாகம்
மானிட மண்டூகத்தை
ஏனடா என நெருங்காது.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...