Friday, April 28, 2017

கற்றை வெள்ளைக் காகிதம்

No automatic alt text available.
கற்றை வெள்ளைக் காகிதம் பற்றி
சற்றே யோசித்தால் ..- இவை
ஒற்றை ஒற்றையாய் ..
வேற்றிடம் போகுமோ..?
ஒன்றாய்க் கூடி நூலாகுமோ ..?
நன்றாய்ப் படிப்பவன் ஏடாகுமோ..? - இளம்
கன்றுகளின் வானவில் வர்ண
குன்றாகுமோ ..? - காதலில்
மன்றாடும் மடலாகுமோ..? - மாணவர்
திண்டாடும் வினாத்தாளாகுமோ..?
தென்றல் வீசும் …
முன்றிலில் காகிதப் பறவையாகுமோ…?
கல்லூரி வாசலிலே ..
துள்ளிடும் அம்பாகுமோ….?
யாப்பினை ஆராய்ந்து ..
காப்பியக் களமாகுமோ ..?
பிறந்தநாள் வாழ்த்தாகுமோ …?
மறந்திடா மளிகைப்
பட்டியலாய் ...நீளுமோ..?
வெட்டி ஒட்டிப் பள்ளி
திட்டப் பணியாய் ..பாராட்டு
கேட்டு நின்றிடுமோ …?
முனைவர் பட்டத்திற்குத் . ..
துணையாகி ஆய்வாகுமோ …?
கற்றை கற்றையாய் கோடியதை
ஒற்றைவரிக் கணக்கெழுதும் வங்கியிலே
பற்று வைக்கும் சுவடாகுமோ ….?
செடியாய் மரமாய் ….நேற்று
படிமங்களாய் ………..இன்று - என்ன
வடிவங்களோ…….. ..நாளை..?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...