Kurunthogai#18
#Rajikavithaigal ( மீள் பதிவு)
ஊர் உறங்கும் நேரத்துல
யாரும் பாக்காம நீ வார
வெளஞ்ச மூங்கில்
வேலியிட்ட வேர்ப்பலா
நாலு ஒந்தோட்டத்துல - என்
மலநாட்டுக்காரா
பல நாளா உன் உசுர
நெஞ்சுல வச்சு
வஞ்சி மக எளச்சாலே
வேலியில்லா மரமாத்தான்
காலி நிலமா கெடக்காலே
ஒட்டிக்கிட்டு கிடக்குதே
உச்சியிலே அவ உசுரு
பெத்தம் பெரிய பலா
ஒத்தக் குச்சியில
தொங்குற கணக்கா
இங்க யாருக்கு
மங்குன அவ மனசு புரியுது
பொங்குற நல்ல சேதி
எப்ப தருவியோ - என்
மலநாட்டுக்காரா
“வேரல் வேலி வேர்க்கோள் பலவின்” எனத்தொடங்கும் குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
எழுதியவர்: கபிலர்
சூழல்: இரவில் காதலியைச் சந்தித்துத் திரும்புகிறான் காதலன். அவனைச் சந்தித்து, காதலியை மணந்துகொள்ளுமாறு கேட்கிறாள் தோழி
நன்றி (படம்) : விக்கிபீடியா
நன்றி : முனைவர் பிரபாகரன்.
nallaKurunthogai.blogspot. com
குறுந்தொகை #18
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
No comments:
Post a Comment