தேடி வந்தான் ...தெரு அடங்கிய பின்
வாடியவளின் ..வாட்டம் தீர்க்க ..
வஞ்சியவள் காணும் முன்னே
தோழி அவனை கண்டு விட்டாள்
நோட்டம் விட்ட தோழி - ஒரு
பாட்டம் குறை கூறி
நின்றாள் தலைவியிடம் :
உன்றன் உள்ளம் கவர் கள்வன்
நோக்கம் தெளிவில்லை - மனப்
போக்கும் சரியில்லை..
குறிஞ்சி பூத்த வேலியோராம்
நெருஞ்சி முள் நெஞ்சில் தைக்க
மருகி நின்றான் - மனம்
கருகி வெந்தான் ..
தாக்குதலை ஏற்ற தலைவி - பழி
நீக்க வந்தாள் ..
ஓடி மிதக்கும் பூமியை விட
கோடி முறை பெரியது
ஓங்கி உயர்ந்த வானமே
ஏங்குமளவு உயர்ந்தது
ஆழ்கடலை சிறு
நுரை குளமாக்கும்
எங்கள் நட்பு
வேலியோர
நெருஞ்சி முள்
நொறுங்கியது
குறிஞ்சி பூத்து
குலுங்கியது ..
* “நிலத்தினும் பெரிதே “ என்ற குறுந்தொகை பாடலை அடிப்படையாக கொண்டு எழுதியது. ( எழுதியவர் : தேவகுலத்தார்
நன்றி:முனைவர். பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
No comments:
Post a Comment