Kurunthogai #13
மயங்குகிறாள் ஒரு மாது..
இனிமை மாறி
தனிமையான மாயம்
இனி வருவது குறுந்தொகை#13
கருங்குவளை ….
இரு விழிகள் …
பெருகி ஓட …
மறுகி தனியே …
அருவி சூழ் அன்பரே..!
அசையும் குன்றாய் யானை
இசைந்து இணங்க ..
தேகம் தேய்க்கும்
பாகன் பாங்காய் ..
மேகம் கவிழ்ந்து ..
வேகமாய் கரையும்
சொரசொரத்த ..செம்மண் திட்டு
பரபரத்த சிறகுடன் ..
கரும்பாறை நிழல்
அருகே அனைத்து
திசை மறந்து
இசையான இனிய நொடி
பசுஞ்சோலை பனி நாடன்
விசும்பாய் உடன் நானும்
அன்றில் ஆனோம்
இன்று நீ எங்கே ..?
தென்றலுடன் வெளிச்
சென்றாயோ ?
கருங்குவளை ….
கருகும் கணம்….
உருகாதோ உந்தன் மனம் ..?
“மாசறக் கழீஇய யானை” எனத் தொடங்கும் #13.குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
பாடியவர்: கபிலர்.
கூடி மகிழ்ந்திருந்த தலைவனை ,சிலநாட்களாக காணாது வருந்தும் தலைவி. குவளை மலர் கண்கள் பசலை நோயுற்று ஆறாய் பெருகிய நிலை.. தன் தோழியிடம் தலைவி பேசுவதாக அமைந்துள்ளது..
#Rajikavithaigal
படம் நன்றி: wikipediacom, nanjilsubhash.blogspot.com
தகவல் நன்றி : முனைவர்.பிரபாகரன்
nallakurunthogai.blogspot.com
மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.
No comments:
Post a Comment