Thursday, May 4, 2017

மனோரமா நினைவு நாள் கவிதை

கவியுலகப் பூஞ்சோலை கவிதைப் போட்டி (11-10-2016)

மனோரமா நினைவு நாள் கவிதை

திரையுலக நடிப்பதனில்  
நரை வராத நகைச்சுவைக்
கரைக் கண்ட ஆச்சியின்
மறைவுதனை நினைத்திடுவோம்..

பிறை நிலவே காணாமல் - தினம்
சிறை பிடிப்பார் முழுநிலவை நடிப்பில்
தலைமுறைகள் பல கண்டு
பல விருது மிக வென்று

சிலை கொண்டார் மக்கள்
மனமென்னும் பெருவெளியில்
கலையென்னும் வானில்
காலமதைக் காட்டும் துருவமவர்.

பகை மிகுந்த  திரையுலகில்
நகைச்சுவையால் உலகை தன்
வயமாக்கி சிரிப்பூட்டியவர் - அதில்
பயம் என்பதறியா மாது ஆச்சி .

மனோரமாவாய்
மனங்களை ரம்மியமாக்கி
நனைத்து விட்டார் சிரிப்பு
தேனில்...நனி மகிழ்ந்தோம் நாம்.
சிறு குழந்தையாய் ஆனது போலொரு
மறுவுணர்வு நமக்குந்தான் உண்டாச்சு.

சிறுமுறுவலே சிறப்பாக்கும் உடலின்
சுறுசுறுப்பு மேன்மைதனை - ஓயாமல்
சிரிக்க வைத்து நம் குடும்ப
மருத்துவராய் ..நம்மில் ..

ஒருவராய் நம் ஆச்சி.

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...