Thursday, May 4, 2017

கண்டனையோ..விண்டனையோ - குறுந்தொகை #75


கண்டனையோ 
கண்டதை விண்டனையோ 

கண்டவர் விண்டதெனில் 
கண்டவரை யாம் 
கண்டிடல் வேண்டுமின்றே 

வெண்டாமரைக் கொம்பு களிறு 
மொண்டாடும் சோணையாறு 
கொண்ட நல்லூரைக் 
கொண்டிடுவாய் பரிசாக …


“நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ “குறுந்தொகைப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
எழுதியவர்: படுமரத்து மோசிகீரனார்
சூழல்:
தலைவன் வருகிறான் என்று பாணன் சொன்னதை நம்ப முடியாமல், ”நீ கண்டனையோ?, கண்டார்க் கேட்டனையோ?,யார்வாய்க் கேட்டனையோ? ” என்று கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறாள். நாங்கள் உண்மையை அறிய விரும்புகிறோம். நீ சொல்வாயாக;சொன்னால், வெண்மையான கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் மூழ்கி விளையாடும், பொன்மிகுந்த பாடலிபுத்திர நகரத்தைப் பெறுவாயாக.

#75.குறுந்தொகை
நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ

வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

நன்றி : முனைவர். பிரபாகரன்
Nallakurunthogai.blogspot.com

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...