தேய்பிறை நிலவாய் நீ
சாய்ந்திடு என் தோளில்
தேய்ந்த நிலவை நான்
பௌர்ணமியாக்குவேன்
பத்திரமாய் இதயம் சேர்ப்பேன்
நித்தியமாய் நெஞ்சில் சுமப்பேன்
சத்தியமாய் சாகசங்கள் செய்வோம்
காத்திருப்பு ஏதற்கடி ?
தோத்திரங்கள் தோற்றாலும்
சாத்திரங்கள் சாய்த்தாலும்
எத்திறனும் கற்றிடுவோம் என் காலில்
பத்திரமாய் சுற்றிடுவோம் - இப்போதே
காத்திரமாய் உன் கரங்கள் என்
பாத்திரமாய் ஏற்று விட்டேன்.
ஓருயிர் ஈருடல் சோதனையோ ?
ஓருயிர் ஒன்றரை உடல் சாதனையை
பாரினில் செய்திடுவோம்.
No comments:
Post a Comment