இளையர் தம் ஓர்மை சீர்மை
கலையாத நற்பண்பு என்றும்
தொலையாத நிதியமென
நிலை கண்டு ஈன்ற பொழுதும்
பெரிதுவக்கும் தாயுள்ளங்களும்
பெருமை மிகு சான்றோன் எனக்
கேட்ட தந்தையரும்
போற்றி நிற்கின்றோம்
நாட்டு மாடுகள் வழியாய் நம்
வீட்டு கன்று குட்டிகளின்
நயம் கண்டு நாட்தோறும்
வியந்து நிற்கின்றோம்
காலத்தின் கலங்கரை விளக்குகளாம்
ஞாலத்தின் எதிர்கால நம்பிக்கை
நட்சத்திரங்கள்...இவர்கள்
அச்சமில்லை…. அறம் வாழும்
மிச்ச காலம் பூமியிலே
No comments:
Post a Comment