கங்கை மைந்தன் கரை சேர்ந்துவிட்டார்
நம்கை எல்லாம் எப்போது பிறவி
பெருங்கடல் நீந்தி கடக்குமோ?
பெருங்கடல் பெம்மான் தான்
சுருங்கிட விடைதருதல் வேண்டும்.
அரும்பிடும் ஆசைகள் ஆயிரம் கோடி
விரும்பிடும் வித்தைகள் வித விதமாய் - ஆசை
அரும்புமிடத்தில் விரும்பி அழித்திட்டால்
திரும்பி வந்துழல வேண்டுவதில்லை
கரும்புச் சாறாய் கவிமொழியில் கற்றாலும்
இரும்பு மனம் இலகுவாய் இளகுவதில்லை .
கரும்புகையாய் கருமம் கண்மறைத்து
விரும்பும் வண்ணம் வினை மிக செய்திடுதே.
எறும்பூர கல் தேயும்போல் கல்மனதில்
விரும்பி விரும்பி அவன் நாமமேற்ற
திருந்தியோர் மனமாற்றம் வருமோ?
No comments:
Post a Comment