Thursday, May 4, 2017

ஆத்தாடி பசிய மட்டும் காங்கலையே

பாரதிதாசன் போட்டியாளர் # 1
படக்கவிதை (18-11-16)

ஆரவல்லி சூரவல்லி
அடியாத்தீ அதிசயமே
அள்ளி வச்ச  நல்லி எலும்ப
தள்ளி வச்சு இலையில
புள்ளி வச்சு கோலம் போட்டு  நிக்கிறீக
சுள்ளி பொறுக்கி வந்த மாமியா
கொல்லுன்னு தான் சிரிக்க

கள்ளி அவ அத்த மக
ஜல்லிக்கட்டு மாமன்
முகம்  பாத்து சொக்க
அகப்பையிலே கறியிருக்கு
அள்ளித் திங்க வாயிருக்கு
ஆத்தாடி பசிய மட்டும் காங்கலையே
காத்தாடி மனசு ரெண்டு
கூத்தாடி நிக்கையிலே ….







No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...