Thursday, May 4, 2017

அகர வரிசை கவிதை...

அகர  வரிசை கவிதை...

அன்னப்பேடையவள் அன்றிலாகி
ஆருயிருமாகி ஆனந்த ஆட்சியிலே
இரு இன்னுயிர்கள் இன்னுமீருயிர்களை
ஈந்திங்கே ஈகையேற்று
உலகதிலே உயர்வாய் உலாவி - உள
ஊசலடக்கி  ஊர் ஊனமகற்றி
என்பும் எனதல்ல என்றாகி
ஏற்றமிகு ஏரெனவே
ஐம்புலனை ஐக்கியமாக்கி ஐயனை
ஒன்றென ஒப்பமதில் ஒருமித்து
ஓங்கிவிடில்

ஒளவியமேன் ஒளடதமேன் ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...