Friday, May 5, 2017

பசுந்தோகை மயிலாக


பசுந்தோகை மயிலாக
விசும்பிடை மரங்களாட
பசுங்காட்டிடை பளிங்காய்
அசைந்தாடும் நீரோடை…- கவி
ஞானியவன்  பெருங்காதலுற்று  
காணி நிலம் வேண்டியதும் - இயற்கை
ராணியுனை  கண்டதனாலோ? நின்னையே
காற்று வெளியிடை கண்ணம்மாவாய்
கீற்று நிலவினில் கண்டு
தோற்றதுவும் இச்சோலைக்
காட்சியிலோ? மாக்கவியின்
நீட்சியாக மலர்ந்ததுவே
மாட்சியாக கவியிரண்டு

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...