கல்லை கட்டிக் கொண்டு
கடலில் குதித்தது போல்
காலமெல்லாம் கட்டியவனை(ளை)
கரகமாய் தாங்கி
நரக வாழ்க்கையை
நகர்த்தி நல்லதொரு
தலைமுறை உருவாக
விலைகள் கொடுக்கும் உள்ளங்களும்
சிலை வைக்க தகுந்த - சீரிய
காவியக் காதலன்றோ ?
#புதுக்கவிதை வடிவில் சரிந்த மலை விரிந்த இலை செழித்த வாழை பழுத்த குலை பாரம் தாங்காது ஓரமாய் சாய்ந்து விழுந்து சிதறியத...
No comments:
Post a Comment