எதிலும் அரசியல்
எங்கும் அரசியல்
எப்போதும் அரசியல் - காரணம்
தப்பாமல் அரசியல்
என்றதோர் இழிநிலை
இன்று நம் உலகம்
கண்டு மருக ..நாமோ
கண்கள் சொரிய .
“தான்” என்பது தலைவிரித்தாட
தன்னினம் பெண்டு பிள்ளை
முன்னிறுத்தி - பிறர்க்கு
கண் பொத்தி வாழும்
கயமை உருவாய் அரசியல் .
வாழ்வியல் விழுமியங்கள்
வீழ்ந்து பட்டு உயிரிழக்க
இந்நாளைத் தான்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
பாழ்பட்டதோர் பாரத தேசமென
பொருமி முண்டாசுக் கவி
சுதந்திர இந்தியாவிற்கு
முன்கதைச் சுருக்கம் எழுதிச்
சென்றானோ ?
படித்தவன் பாவம் செய்தால்
‘அய்யோ’ வெனப் போவான்
அடிவயிற்றுச் சாபம்
கொடுத்தானே எம் பாரதி ..- அதுவும்
அடுத்தடுத்து நடந்திடுமோ …?
அச்சாரமாய் அரங்கேறும் ..
அரசியல் காட்சிகள் …..
அதற்கான சாட்சிகள்…
No comments:
Post a Comment