ஜில்லுனு ஒரு படக்கவிதை
கொளுத்தும் வெயிலுக்கு சுகமாய்
கொழுகொழு குழந்தைக் குளியல்
கொட்டும் நீரெல்லாம்
கெட்டிட கூடாதென்று
வட்டமாய் வாளி வைத்து
திட்டமாய் நீர் சேகரிப்பு ..
வருங்கால சந்ததியே
வருந்தாதே நீயும்..
இவ்வறிவுடன் என்றும்
செவ்விய சிந்தையாய்
வாழ்ந்திட்டால் ..வந்திடுமோ
தாழ்ச்சியும் யாருக்கும்?
வீழ்ச்சியும் வாரா
சூழ்ச்சியும் சேரா
No comments:
Post a Comment