Friday, May 5, 2017

கடற்கன்னி தானோ


கலையாத மோனத்தில்
நிலையாக நீருக்குள்
சிலையாகி போனாயோ ?
அலையாழி மாயனவன் மோகினியாய்
சில காலம் வாழ்கையிலே
கலையாத கனவான
காளையவன் கண்டிடவே
மலையாகி மௌனமாய்
பல காலம் தவம் கொண்டாளோ ?
சில வேளை சினந்தாலும்
பல வேளை பரிந்துவக்கும்
கலிகால காதலனை
சிலிர்ப்பாக சிந்தையிலே தானிருத்தி
களிப்பாக உன் உடல்
பாகமதை கடலடியில் கிடத்திய
நாகக் கன்னிகையோ நீ?
மீனுருவாய் வந்திட்ட காதல்
மானுமவள் கடற்கன்னி தானோ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...