விடுதியில் இருக்கும் மகனுக்கு
சடுதியாய் சமைத்து பகலில்
நெடுந்தூரம் போய் கல்லூரியை
தொடும் தூரத்தில் நீண்ட
வரிசையில் வண்டிகள்
பொறித்த கறிகாய்கள்
வறுத்த அரிசி வகை
பிரியாணியாய் வாசனை நமக்கு
புரியாத பெயர்களிலே..
அறியாத உணவு வகைகள் …
வடிவமில்லா அன்பிற்கு
வடிவான வாசம்
உண்டென கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்
வண்டிகளின் வரிசை காத்திருப்பில் -கற்
கண்டின் சுவை கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்
No comments:
Post a Comment