Thursday, November 16, 2017

மீட்டாத வீணை....

மீட்டாத வீணை....

காட்டாத அன்பிருக்கும் அகத்தினிலே
மீட்டாத வீணைகள் வீற்றிருக்கும்
போற்றாத புவனந்தனில்
காற்றாய் கலந்திருக்கும் நாதம்
சேற்றிடை செந்தாமரையாய் - விஷ
காற்றிடை கவின் மலராய் - தென்னங்
கீற்றிடை ஒளிறு வெண்ணிலவாய்
மாற்றங்கள் கண்டிடவே
தேற்றங்கள் மனமிருத்தி
தடுமாற்றங்கள் பல ஒதுக்கி
விடுபட்டேகும் நாளை நோக்கி - சுகப்
படுதல் காண  தினம் எண்ணி ..


ஆரபியில் அயர்ச்சி நீக்கி  ..
பாக்யஸ்ரீயில் பதப்பட்டு  - புது
பூபாளம் புலருமென ..
பிலஹரியில் பலப்பட்டு
பிருந்தாவனசாரங்காவில் பிரியமுடன்
பெரும்வெற்றி வேகமென
சரிநிகர் சமானமாகி..
நல்லதொரு  நாளினிலே
கல்யாணியை கரம் பிடித்து
கலையாத கனவதனை
நிலையாக நனவாக்கிடலாம் …
மலையாக மலையமாருதம் ..
சிலையான சித்திர வீணைக்குள்

மீட்டாத.. வீணைக்குள் ..
பூட்டேறிய.. நுகத்தடியில் ..
ஏட்டிலேறா ..ஏக்கங்கள்..
பாட்டாய் ..பல கச்சேரிகள்
நாட்கள்தோறும் நடந்தேறும் ...

குறிப்பு : ராகங்கள் பெயர்களில்  வடமொழி எழுத்துக்கள் தவிர்க்க முடியாததால் பயன்படுத்தி உள்ளேன். மேலும் பெயர்ச்சொற்களை  பயன்படுத்தும் போது  மாற்றங்கள் செய்யலாகாது என்பதால் அப்படியே பயன்படுத்தி உள்ளேன்.
ஆரபி ராகம் - நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி உடல் அயர்ச்சி நீக்கும்.
பாக்யஸ்ரீ  ராகம் - மனதில் சமநிலை தரும்
பூபாளம்  - புது விடியலின் அடையாளம்
பிலஹரி - அன்பு/காதல் மற்றும் உறுதியான உடல் நிலைக்கு உதவும் ராகம்
பிருந்தாவனசாரங்கா - அறிவு,ஞானம்,வெற்றி ,பலம் தரும் ராகம்
கல்யாணி - தாயைப் போல் தயை காட்டி பயமகற்றும் தன்மையது

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...