Thursday, October 19, 2017

மூங்கிலிலே காற்றிசைக்கும் காற்றலைகள்



மூங்கிலிலே காற்றிசைக்கும் காற்றலைகள்…
*****************************************************************

காற்றிலே கலந்த கானம்
கைக்கெட்டாத  கானல் நீராய் கண்ணாமூச்சியாட
மனதில் சோகம் திடமேகமாய்
வெடித்து கேவலாக

கானமின்று என்னைக் கண்டெடுக்க
கருமை..கரைந்து..
வெளிச்ச சூரியன் வெளீரென
வாரியிறைத்தது மனிதத்தின்
வழமையான மகிழ்மன மத்தாப்புக்களை

பசுமையிழந்த கொடியொன்றில்
தொற்றிக் கொண்டது ..தொலைதூர
குழலோசை ..குறுகியும் ..நீடித்தும்
காற்றின் கையசைவின் விரலாக

நீளமாய் ..நெளிந்து..வளைந்து
நெருங்கி வரும் வேணுகானம் ..
வெற்று குழலாகிய என்னுள்
நிரம்பிக் கொண்டிருக்கிறேன்
பேரின்பப் பேறோ
உயிர் நிரப்பும் வித்தையோ
கூடு விட்டு கூடு பாயும் வித்தகமோ
கானம் மிதக்கிறது..மெல்ல..
கானகமாய் மாறும் கணங்கள்
கண்ணெதிரே ..

காட்சி மாற்றத்தில்
கானகமாகிப் போகும் நானும்..

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி
தமிழமுதுக் கவிச்சாரல் குழு

கழிந்த காலம்



கழிந்த காலம்
கலைந்த மேகம்
கலைந்த மேகம் திரட்டி
கடல்  கொண்டிடல் கூடுமோ?

மடல்  விரித்த  தாழை
மொட்டாய் ஆகுமோ?
விரவியோடிய  மணம்
மருவி  பூவில் புகுமோ?

பட்டுத் தெறித்த பதம் - வாய்
விட்டு வருதல்  நிதம்
சப்த கூட்டமது 
நிசப்தமாய் நிச்சலனமாகுமோ?

மசிந்த மாவதனை
மாகாணி நெல்லாக்கி
முப்போகம் விளைவிக்க
எப்போதும் வழியுண்டோ?

கழிந்த காலம் ..
அழிந்த கோலம்
விழுந்து புரண்டால்
கழியும் நிகழ்கணம்
அழியும் கோலமாய்

தெளிவாய் இக்கணம்
பழிக்கஞ்சி பண்பாய்
செழிப்பாய் மனம் இருந்திட்டால்
பொழிப்பாய் பொங்குமே - நதி
சுழிப்பாய் நகர்ந்திடுமே
வாழ்வோட்டம்

கடிந்த கால கடுகுகள் மேல்
மடிந்த மனதை நீட்டி
விடிந்த பொழுதை காட்டி
தொடர்ந்த கதையே
நொடியா மகிழ்வு.

#Rajikavithaigal


தமிழமுதுக் கவிச்சாரல் குழு

என்ன_புண்ணியம்_செய்தேன்

 18--10 2016
தமிழமுது_கவிச்சாரல்_குழுமம்

என்ன புண்ணியம் செய்தேன் ..

கண்ணனென உள்ளங்கவர்

கள்வனே ..மகனாக

செல்லமவன் அகவை

நாலிரெண்டில் ..

நல்லதொரு ..

விழாவினிலே ..

நல்விருந்தாய்

திளைத்திருந்த .

வேளையிலே ..கண்கள் …

குளமாக ..-

உள்ளம் தேம்ப ...

வெள்ளை பட்டுடையில் ..

வெள்ளமென கண்ணீர்த் திட்டுகள்

அள்ளி அணைத்திட்டேன் அன்பனை

சொல்லடா ..என் செல்வமே..!

உள்ளத்தில் காயமென்ன?

பிள்ளைப் பேசியது விசும்பலிடை :

அள்ளி எரியும் ..

எச்சில் இலைக் கூட்டத்தில் ..

அச்சச்சோ கண்டேனே

பிச்சைக்காரர்கள்

முண்டியடித்த காட்சி ..

வண்டி வண்டியாய் உணவதனை

திண்டுக்கல் சமையல்காரர்

கொண்டு வந்து குவித்தாரே

கொடுப்பதற்கு குறையேதம்மா

தடுப்பவர்கள் யாரும் இங்குளரோயம்மா

திகைப்புற்றோம்

திண்ணையிலிருந்த

பண்ணையார் முதல்

பண்ணையாள் வரை ..

புண்ணியம் மிக செய்தேனய்யா

மண்ணுயிரை தன்னுயிராக காணும்

புண்ணியனை மகவாய் பெற

வரம்_வேண்டும்_கொடுப்பாயா..என

கரம் நீட்ட ஏதுமுண்டோ இறையிடம் ?

கவிதை ஆக்கம் : ராஜி வாஞ்சி
Raji Vanchi

,

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...