# சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா
நெற்றிச் சின்னமது
பற்றியது பிறப்பினிலே .
உற்றவர்கள் என மனம்
பற்றியதோ - மத
ஒற்றுமையை நன்கு
கற்றவரை - உலகிலுயிர்
பெற்றவர்கள் யாவருமே
நற்றவப் புதல்வரன்றோ - நாளும்
சுற்றி வரும் பூவுலகத் தாயிற்கு.
சிற்றறிவு சிலர் கொண்டு
மற்றவரை மறுக்கும் மாயை
எற்றைக்கும் இருப்பதுண்டு.
நற்றறிவு கொண்டு நாம்
பெற்றிடத்தான் வேண்டும்
வற்றாயிருப்பாய் பேரன்பை
சுற்றமும் நட்புமாய்
இற்றைக்கும் எந்நாளும் இனித்திடுவோம்.
No comments:
Post a Comment