Thursday, August 24, 2017

பருவம்

பருவம்...

கவியுலகப் பூஞ்சோலையின் 24-8-16 ஆம் நாளான போட்டி கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்_Raji_Vanchi அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்


பட்டுப் பாவாடை குட்டி நிலா

பட்டு தாவணியுடன் பௌர்ணமியாய் ….பருவம்!

சுட்டிப் பையன் அவன் - இனிப்புக்

கட்டி விலக்கி

வெட்டியாய் ஊர் சுற்றினால்…..பருவம் !

மொட்டு விரியும் புதுமெட்டு போடும் ….பருவம் !

எட்டு ஈரெட்டாகி இளஞ்சிட்டாகிய ..பருவம் !

ஈரெட்டு மூவெட்டுக்கு முனையும் ..

கல்வெட்டுக் காதல் கனியும் பருவம் !

சேய்க்கெதிரி தாயும் தந்தையுமே

வாய் கிழியும் தாய் உருகும் .

மெய் ஒளிரும் பொய் பெருகும்

மூவெட்டு முத்தெடுக்கும் தம்முயிரை

நகைப்பெட்டி முடிவெட்டி மடிகட்டிய

நகை நாட்கள் ஓடி ...

பால்புட்டி கைப்பெட்டி

பிள்ளைகுட்டி…... பிழைப்பு மாறும்.

அடிபட்டு மிதிபட்டு அன்றாடம் அல்லலுற்று

படிகட்டு பலவேறி (மக்கட்)கல்வி கைதியாவர்.

மட்டுப்படா மனக்கனவுகள் மட்டும்

தட்டுத் தடுமாறும் தலை தெறிக்கும் ஓட்டத்தில்.

கவிதை ஆக்கம்: ராஜி வாஞ்சி

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...